Friday, 27 September 2013

Hi Friends To Day Iam Watching Raja Rani Frist Show, My Vimarsanam


Hi Friends To Day Iam Watching Raja Rani Frist Show, My Vimarsanam

ராஜா ராணி : திரைவிமர்சனம்
கதை :
வெவ்வேறு இரண்டு காதல் கைகூடாமல் பிரிகிறது, இதில் பிரிந்த ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோர்களின் சந்தோசத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்கள்,{ ஆர்யா நயன்தாரா } வழக்கமான தம்பதிகளாக வாழாமல் ஒரே வீட்டில் விரோதிகள் போல் வாழ்கிறார்கள், ஒரு நாள் அவள் இவ்வாறு வாழ்வதற்கான காரணத்தை அவனிடம் சொல்லுகிறாள் { அவளின் முந்தைய காதல் திரை வடிவமாகிறது }
airvaice mobile கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு innacent வெகுளித்தனமான பையன் மேல் கல்லூரியில் படிக்கும் nayagikku காதல் வருகிறது, ஜெய் நயன்தார { காதல் வருவதற்கான காரணங்களை நகைச்சுவையுடன் காட்சி படுத்திருப்பது சிறப்பு } சிலநாட்களில் இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து கொள்கிறார்கள், பொழுது விடிகிறது மணப்பெண் ஆவலுடன் பதிவு திருமணம் அலுவலகத்திற்கு வந்து இரவுவரை காத்திருக்கிறாள், நாயகன் வரவில்லை, அதற்கான காரணத்தை தந்தையுடன் சேர்ந்து தேடும்போது நாயகன் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக நாயகனின் தந்தை சொல்ல நாயகியும் அவளின் தந்தையும் அதிர்ச்சியடைகிறார்கள் சில நாட்களுக்கு பிறகு ஜெய் ஆஸ்திரேலியாவில் இறந்துவிட்டதாக அவனின் நண்பன்மூலமாக நாயகிக்கு தெரியவருகிறது, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாள், அந்த நேரத்தில் தன தந்தையின் விருபதிர்காக ஆர்யாவை திருமணம் செய்து கொள்கிறாள், இவளின் முந்தைய
கதல் கதையை கேட்டதும் ஒரு ஆணை இவ்வளவு ஆழமாக ஒரு பெண் காதலிக்கிறாள் என்பதை உணர்த்தும், தன தவறுகளை திருத்திக்கொண்டு ஒரு நல்ல கணவனாக மாறி வாழ முயலும் நேரத்தில் நயன்தார அவனை பழைய மனிதனாகவே பார்த்து அவனை மீண்டும் வெறுக்கிறாள், இதனால் மனமுடைந்து போகும் ஆர்யாவிற்கு அவன் நண்பன் சந்தானத்தின் மூலமாக ஆர்யாவின் முந்தைய காதல் நயன்தாராவிற்கு தெரியவருகிறது { அவனின் முந்தைய காதல் திரை வடிவமாகிறது ஆரியா நசிரியா } நண்பனுடன் சேர்ந்து ஊர் சுற்றும் வாலிபனாக வரும் ஆர்யாவின் கண்ணில் கல கலப்பாக வாழும் சுட்டிப்பெண் நசிரியா தென்படுகிறாள், அவளை பார்த்ததும் அவள்மேல் காதல் வயபடுகிறான் ஆரியா, ஆரியாவை தனக்கு பிடித்திருந்தாலும் சற்று அலைகழிக்கவிட்டு தன் காதலை அவனிடம் வெளிபடுதுகிறாள், நசிரியா ஒரு அனாதை என்பதை தெரிந்து கொண்ட ஆரியா அவளை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொள்கிறான், திருமணம் ஆனாலும் சிலகாலம் இவ்விஷயம் யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டுமென இருவரும் முடிவுசெய்துகொண்டு ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள் அந்நேரத்தில் எதிர் பாராத விதமாக நசிரியா ஆர்யாவின் கண் முன்னே காரில் அடிபட்டு இறந்துவிடுகிறாள் இந்த துன்பத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஆரியா தன் பெற்றோர்களின் விருபதிர்காக நயன்தாராவை திருமணம் செய்துகொள்கிறான், ஆர்யாவின் காதல் கதையை கேட்ட நயன்தாரவிருக்கு ஆரியாவின்மேல் காதல் பிறக்கிறது, தான் திருந்தினாலும் தன்னை ஏற்க மறுபதால் மீண்டும் பழைய மாதிரியே பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறான், இருந்தாலும் தன் மனைவியின்மேல் உள்ள காதலால் ஒரே வீட்டினில் இருந்து கொண்டு அவளை மறக்கமுடியாமல் தவிக்கிறான், நயன்தாரவிருக்கும் ஆர்யாவின் மீது காதல் வந்தாலும் அதை வெளிப்படையாக சொல்ல அவளின் உணர்வுகள் அவளை தடுகிறது, இதற்கிடையில் முன்பு இருவரும் வெறுத்து வழுந்து கொண்டிருந்த நேரத்தில் நயன்தாரா அவனை விட்டு எங்கேயாவது செல்ல வேண்டுமென எண்ணி அவளின் அலுவலகம் மூலமாக அமெரிக்காவில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள் அங்கு செல்வதற்கான விசாவும் பாஸ்போர்ட்ம் அவனின் வீடிற்கு வருகிறது அதை கொரியர் பாயிடமிருந்து அறிய பெற்றுக்கொண்டு அதை பிரித்து பார்க்கின்றான், பச்போர்டையும் டிக்கெட்டையும் பார்த்த ஆரியா அவள் தன்னை பிடிக்காமல் தான் வெளிநாடு செல்லுகிறாள் என்பதாக நினைத்துகொண்டு அந்த பார்சலை அவளிடம் கொடுக்கிறான் அதை பார்த்து அவள் என்ன செய்வதெரியாமல் யோசிக்கிறாள் இருந்தும் வெளிநாடு செல்ல அவள் முடிவு செய்கிறாள் ஒருபுறம் அவன் தன்னை ஏற்றுக்கொண்டு போகவேண்டாமென்று தடுக்க வேண்டுமென ஏங்குகிறாள் மறுநாள் விமான நிலையத்தில் அவளை இறக்கிவிடுகிறான் அப்போதாவது அவன் தன்னை கூப்பிடுவான் என ஏங்கி நடந்து செல்கிறாள் அவனும் கூப்பிடுகிறான் ஆசையாக திரும்புகிறாள் இவனோ கனத்த இதையதுடம் டாட்டா சொல்லுகிறான், மீண்டும் ஏமாந்து வேகமாக விமானநிலையத்தின் உள்ளே செல்லுகிறாள் இவனும் அங்கிருந்து காரில் வெளியே செல்லுகிறான் அப்பொழுது அவளிடமிருந்து அவனுக்கு கால் வருகிறது சீக்கிரம் உள்ளே வா என்கிறாள் இருவரும் மிகுந்த சந்தோசத்துடன் ஓடி வருகிறார்கள், அங்கே வந்ததும் அவள் அவனிடம் ஏதோ சொல்லுகிறாள் { அந்த காட்சி திரை வடிவமாகிறது } இவள் உள்ளே சென்று பாஸ்போர்ட்டை கவுன்டரில் உள்ள அதிகாரியிடம் கொடுக்கிறாள் அந்த அதிகாரி ஜெய் இவளோ அதிர்ச்சி அடைத்து ஓடி அவனிடம் வருகிறாள் இதை சற்றும் எதிர்பார்க்காத ஆரியா இவளுக்காக ஜெயிடம் பேசுகிறான் அதற்க்கு ஜெய்யோ நான்தான் என் நபனிடம் நான் இறந்துவிட்டதாக சொள்ளசொன்னேன் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறான், பிறகு அதை இவளிடம் ஆரியா சொல்லுகிறான் அதற்க்கு இவள் நான் எப்படி சொல்லி உனக்கு புரியவைகிராதுன்னு எனக்கு தெரியல நன் போர்னு சொல்லிவிட்டு புறபடுகிறாள் அப்பொழுது ஆரியா ஐ லவ் யு என்று சொல்லுகிறான் பிறகு இருவரும் கட்டிபிடிது கொல்கிரார்கள் பாடம் முடிகிறது ,

முதலில் கதை விவாதம் :
இந்த படத்தின் கதை, மணிரத்னம் டைரக்ட் செய்து வெற்றிகரமாக ஓடிய மௌனராகம் திரைபடத்தின் தழுவல் என்பதை படம் பார்த்த யாரும் மறுக்கவோ மறக்கவோ கூடாத ஒரு விஷயம் அதில் மூன்று பேர் இரண்டு காதல், இதில் நன்கு பேர் மூன்று காதல், மற்ற அனைத்தும் கிளைமாக்ஸ் உட்பட மற்றம் இல்லை, அப்படி எதாவது வேறு பட்டாள் அது முழுக்க முழுக்க காமடி மட்டுமே சில இடங்களில் மற்றம்,

படத்தின் பிளஸ் :
படத்தில் ஜெய்யின் கதாபத்திரமும் நயன்தாராவின் காதலையும் மிகவும் அருமையாக நகைச்சுவையுடன் கட்சிபடுதிருபது, ஆர்யாவும் சுட்டிப்பெண் நஜிரியாவும் காதலிப்பதும் மிகவும் அருமையாக கட்சிகளாக தொகுக்கபட்டிருபது படத்தின் பலமாக நன் உணருகிறேன், அதை விட முக்கியமாக படத்தின் இரண்டு பாகத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரபட்டிருபது சிறப்பு,

படத்தின் மைனஸ் :
ஜெய் நயன்தாரா, ஆரியா நசிரியா, இந்த இரண்டு காதலும் பிரியும் இடத்தில நமக்கு வருத்தமான உணர்வுகளை அழுத்தமாக பதியவைக்க தவறிவிட்டனர் அதவும் இரண்டு இடத்திலும் உயிர் இழப்பினால் அவர்கள் காதல் பிரிவதைபோல் கதை செல்வதால் \

கண்டிப்பாக அதை நமக்கு மனதளவில் உணர்த்த தவறிவிட்டார்கள், இருந்தாலும் அந்த அழுததை கிளைமசில் பதிய வைக்க முயன்று இருகிறார்கள், இறந்து போனதாக ஜெய் காட்டிவிட்டு கிளைமசில் அவன் உயிரோடு இருபது போன்று காட்டி, அதுவும் நயன்தாராவையும் ஜெய் யையும் ஒருவரை ஓருவரு சந்திபதுபோல் காட்சி படுத்தி அதற்க்கு அழுத்தமான ஒரு காரணம் இல்லாமல் மேலட்டமாக் ஜெய் விளக்கம் கொடுப்பது படத்தின் விமர்சனத்திற்கு வழிவகுக்கிறது,


பாராட்டு :

படத்தின் இயக்குனரை நாம் கண்டிப்பாக பாராட்டவேண்டும், இது அவரின் முதல் படம் என சொன்னால் நம்பாத அளவிருக்கு இதை காட்சி படுதியுருபது பாராட்ட படவேண்டிய ஒரு விஷயம், ஏனென்றால் முதல் படம்மேடுக்கும் இயக்குனர்கள் பொதுவாக ஒரு கிராமத்தை மையமாக வைத்து அதில் காதல் அல்ல நட்பு இவற்றை கட்சிபடுதி மிக குறைந்த செலவில் புதிய அல்லது இளம் நடிகர்களை வைத்தே படம் எடுப்பார்கள், அனால் இவரோ நட்சத்திர நாயகர்கள் நாயகிகள் இவர்களை வைத்து நல்ல செலவில் இப்படத்தை இயகியுருபது மிகவும் சவாலான ஒன்று

ஒளிபதிவாளர் இப்படத்தில் ஒவொவொரு கட்சியிலும் தன்னை நிலை நிறுத்தியிருப்பது முக்கியமாக பாராட்டவேண்டியவர், இவர் புதியவர் என்பதை என்னால் நம்ப முடிய வில்லை, இருந்தாலும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் சிறப்பான எதிர்காலம் உண்டு

பாடல்கள் சுமார் பின்னணி இசை சிறப்பு
மொத்தத்தில் அனைவரும் சந்தோசமாக பார்க்கவேண்டிய ஒரு படம்
எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்


விமர்சனகர்தா
எழிலரசன்

Thursday, 16 February 2012


 என் அருமை தோழிகளே தோழர்களே. நீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் இந்த வலைதொடர்பில் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். தொடர் பயணங்களாலும். சற்று வேலை பளுவினாலும். உங்களை சந்திக்க இந்த நிண்ட காலதாமதத்திற்கு என்னை மன்னிக்கவும். நன் இன்று உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தொஷம் கொள்கிறேன்.
   
   இன்று எனது படைப்பில் எனது நீண்ட நாள் ஆசையான short filmஉருவாக்கும் முயற்சி தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
 அமாம் எங்கள் அலுவலகத்தில் உள்ள சில நண்பர்கள் சேர்ந்து ஒருகுறும்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
 ஒருவகையில் இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும். என் மனம் நிறைவு பெறவில்லை. என் மனதில் தோன்றியபடி என்னால் திரையில் அதனை சரியாகவும் முறையாகவும் அழகாகவும் காட்சிபடுத்த தவறிவிட்டேன்.  சரியான திட்டமிடல். போதிய கல அவகாசமின்மை. சக technician குள் புரிந்துணர்வு இல்லாமை, சிறு பதற்றம். மற்றும் சில காரணங்களால் என்னால் அதனை சிறப்பாக செய்ய முடியவில்லை. இதை ஒரு அனுபவமாக எடுத்துகொண்டு  எனது
அடுத்த குறும்பட படைப்பை சிறப்பாக தர முயற்சி செய்கிறேன்,  இருந்தும் எனது லட்சிய பயணத்தின் பாதையில் எனது காலடி தடங்களை பதியவைதுள்ளேன் என்னும் சிறு மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  நான் என்று பாராமல், ஒரு அறிமுகமற்ற மனிதனின் படைப்பு என்று எண்ணி இதை நீங்கள் பார்த்தல். ஒரு சில நிமிடங்கள் உங்கள் மனிதில் இப்படம் வந்து போகலாம்.

http://www.youtube.com/watch?v=i5EUErO3Pz0

இந்த லிங்கை கிளிக் செய்து குறும்படத்தை காண்க

இப்படிக்கு உங்கள் 
ஆருயிர் நண்பன்


வேலு எழிலரசன்

Wednesday, 15 February 2012

Moon Light Solder { Short Film }

 என் அருமை தோழிகளே தோழர்களே. நீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் இந்த வலைதொடர்பில் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். தொடர் பயணங்களாலும். சற்று வேலை பளுவினாலும். உங்களை சந்திக்க இந்த நிண்ட காலதாமதத்திற்கு என்னை மன்னிக்கவும். நன் இன்று உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தொஷம் கொள்கிறேன்.
    
   இன்று எனது படைப்பில் எனது நீண்ட நாள் ஆசையான short filmஉருவாக்கும் முயற்சி தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
 அமாம் எங்கள் அலுவலகத்தில் உள்ள  சில நண்பர்கள்  சேர்ந்து ஒருகுறும்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
 ஒருவகையில் இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும். என் மனம் நிறைவு பெறவில்லை. என் மனதில்  தோன்றியபடி என்னால் திரையில் அதனை சரியாகவும் முறையாகவும் அழகாகவும் காட்சிபடுத்த தவறிவிட்டேன்.  சரியான திட்டமிடல். போதிய கல அவகாசமின்மை. சக  technician குள் புரிந்துணர்வு இல்லாமை, சிறு பதற்றம். மற்றும் சில காரணங்களால்  என்னால் அதனை சிறப்பாக செய்ய முடியவில்லை. இதை ஒரு அனுபவமாக எடுத்துகொண்ட எனது  
அடுத்த குறும்பட படைப்பை சிறப்பாக தர முயற்சி  செய்கிறேன்,  இருந்தும் எனது லட்சிய பயணத்தின் பாதையில் எனது காலடி தடங்களை பதியவைதுள்ளேன் என்னும் சிறு மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  நான் என்று பாராமல்,ஒரு அறிமுகமற்ற மனிதனின் படைப்பு என்று எண்ணி இதை நீங்கள் பார்த்தல். ஒரு சில நிமிடங்கள் உங்கள் மனிதில் இப்படம் வந்து போகலாம்.
இந்த லிங்கை கிளிக் செய்து குறும்படத்தை காண்க
   
இப்படிக்கு
உங்கள் ஆருயிர் நண்பன்
      
வேலு எழிலரசன்
நன்றி

Tuesday, 19 July 2011

"இருதலை ராகம்"

என் அருமை தோழர்களே தோழிகளேஉங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்,  இன்று என் வலை தளத்தில்என் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை கொள்கிறேன்

இக் கதையைஉங்கள் மனம் அமைதியாக இருக்கும்,  சூழலிலோ,  அல்லதுஎல்லா  வேலைகளும் முடிந்து இரவு நேரத்தில் தூங்கும் முன்போஇக் கதையை படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,  ஏனேன்றால் உங்களை உங்கள் இளமை காலத்திற்கு,  நீங்கள் பிறந்த ஊருக்குஉங்கள் 16 வயதிற்கு நான் உங்களைஅழைத்து
  செல்ல விரும்புகிறேன் 

  

     ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல்விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்பூவுக்கும் வண்டுக்கும் காதல்என அணைத்து நிலைகளிலும் பரவி இருக்கும் இந்த காதலை நாம் அனைவரும் கடந்து வந்திருப்போம் என்பதை யாரும் மறுக்கவோமறக்கவோ இயலாத ஒன்றுஅதிலும் முதன் முதலில் பூத்த அந்த முதல் காதல் ஒரு தனி சிறப்பை பெற்றிருக்கும்அப்படி ஒரு காதலை தான்  இருதலை ராகம் என்ற தலைப்பில் எழுதுகிறேன், ,






             

தமிழகத்தில்  கடலூர் மாவட்டத்தில்ஸ்ரீ நடராஜ பெருமாள் அவதரித்த சிதம்பரதிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குக் கிராமம் தான் நான் பிறந்த ஊர்,  இயற்கையின் செழிப்பால் எனது கிராமம் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும்நெற்பயிர்கரும்புநிலகடலை இவகைளெல்லாம் எனது கிராமத்தின் விளைநிலங்கலாகும்எனவேதான் இவ்வுலகத்தில் பிடித்த இடமாக எனது ஊரை என் மனம் முன்மொழிய துடிக்கும்நானும் சிறுவயதில் எல்லோரையும்போல ஊர் சுற்றிக்கொண்டுகிரிக்கெட் விளையாடிக்கொண்டும் அவ்வபோது பள்ளிக்கும் சென்றுகொண்டு ,எனது இளமை காலங்களை கழித்துகொண்டிருந்தேன்அதுவரை நண்பர்களும்கிரிக்கெட்டும் மட்டுமே உலகமாக தெரிந்த எனக்குவேறொரு புது உலகத்தை உணர ஆரம்பித்தேன்அந்த மாய உலகம்தான் காதல்,




எனக்கோ வயது பதினாறை தாண்டி பயணித்ததுஅவளுக்கோ பதினாலை

தொட


 துடித்தது, இருந்தும் இருவருக்கும் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு, அப்பொழுதுதான் என் முகத்தில் அரும்பு மீசை துளிர்விட்டது, அனால் எப்பொழுது எப்படி அந்த காதல் வந்தது என்று இதுனால் வரை என்னால் கனிக்கமுடியவில்லை, இதில் என்ன வேடிக்கை என்றால், சிறுவயதிலிருந்தே  எனக்கு அவள்மேல் கோபமும், என் மேல் அவளுக்கு வெறுப்பும்  தொடர்ந்து கொண்டிருந்தது, ஏனென்றால் நானோ ஏழை அவளோ கொஞ்சம் வசதியானவள் வெள்ளைத்தோல் நிறம் கொண்டவள், கொஞ்சம் திமிரும், அடிகடி கோபம் கொள்ளும் சுபாவம் உடையவள் , இந்தமாதிரி குனம் உடைய பெண்களை எனக்கு அறவே பிடிக்காது, அதுமட்டும்மில்லாமல் சுமார் நூறு வீடுகள் உள்ள எங்கள் தெருவில் அப்பொழுது  பத்து வீட்டில் மட்டுமே டிவி இருந்தது  , இதில் இரண்டு வீட்டில் மட்டுமே நான் டிவி பார்க்க செல்லுவேன், ஒன்று எங்கள் ஊரிலேயே முதல் முதலில் கலர் டிவி வாங்கிய இன்ஜினியர் பெறுப்பா வீடு, மற்றொன்று என் காதலியின்வீடு  அவள் வீட்டில்  ப்ளோக்கன் ஒயிட் வீடியோகான் டிவி மற்றவர்கள் வீட்டுக்கு நான் போவது கிடையாது,  இன்ஜினியர் பெறுப்பா வீட்டில் டிவி பார்பதென்பது சற்று கடினமானது , அங்கு டிவி பார்க்க போனால் அந்த பெறுமாவை சமாளிக்க முடியாது, டேய் கடைக்கு போய் கடலை எண்ணெய் வாங்கிவா துவரம் பருப்பு வாங்கிவா, மரத்தில்  ஏறி முருங்கைக்காய் பரி, கீரை  ஒடிச்சு குடு  வயலுக்கு போய் பெறுப்பாவிர்க்கு சாப்பாடு கொண்டுபோய் குடு என்று எதாவது ஒரு வேலையை கையில் வைதுகொண்டே இருப்பார்கள், நான், நான் மட்டுமில்லாமல் எனது வயதில் உள்ள ஆண் பெண் என அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் "சக்திமான்" சனிகிழமை பதினோரு மணிக்கல்லாம் இந்த இரண்டு வீட்டில் எதாவது ஒரு வீட்டில்தான்  இருப்பேன் பெரும்ம்பாலும் பெருபா  வீடிற்கு செல்வதை தவிர்ப்பேன், அங்கு சென்றால் கண்டிப்பாக முழுமையாக நாடகம் பார்க்க முடியாது, அதனால் இங்கு தான் பல நேரங்கள் டிவி பார்பேன், அங்கு அந்த பிரச்னை என்றால் இங்கு இவள் தொல்லை அதிகம், அந்த காலகட்டங்களில் சன்,ஜெயா,ராஜ்,விஜய், பொதிகை என  மொத்தம் ஐந்தே சேனல்கள்தான், நாடகத்தின் இடையில் விளம்பரம் ஓடும் பொழுது அவள் ஓயாமல் ரிமோட்டில்  சேனலை மாற்றி கொண்டிருப்பாள், இதனால் விளம்பரம் முடிந்து நாடகம் ஓடிகொண்டிருக்கும்,   பொதுவாக நான் படங்கள விரும்பி பார்க்கும் பொழுது யாரேனும் தடங்கல் செய்தால் எனக்கு கடும் கோபம் வரும், சக்திமான் என்றல் சொல்லவா வேணும், இருந்தும் என்ன செய்ய, எனது வீடாக  இருந்தால் டிவி பெரிச்சம்பழகரரிடம்தான் இருக்கும், இது  அவள் வீடாச்சே, அதனால் எனது கோவத்தை கட்டுபடுதிகொண்டு அவள்மேல் வெறுப்புடன் டிவி பார்பேன், இதனாலேயே எனக்கு அவள் மீது  வெறுப்பு ஏற்பட்டது, அவளுக்கும் என்னை போல் எதாவது கோபம் இருந்திருக்கலாம், இதனால் சிறுவயதில் நாங்கள் சண்டையிட்டு கொண்டதே அதிகம், அப்படிப்பட்ட ஒரு பெண்ணின்மேல் எனக்கு காதல் பூத்ததை என்னால் இன்றும் நம்ப முடியவில்லை,





நான் அப்பொழுது டிப்ளமோ எலக்ட்டிரிக்கள் படித்துகொண்டிருந்தேன், அவள் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தால், லவ் மூட் ஸ்டார்ட் ஆனதிலேருந்து நான் தினமும் காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்து பல் துலக்கி குளிச்சிட்டு, புத்தகத்த எடுத்து படிப்பது போல உட்காந்திடுவன், இல்லனா எங்க அம்மா என்ன சந்தேக படுவாங்க, இந்த நேரத்தில இவன் எதுக்கு குளிச்சிட்டு, அப்படி  எங்க போறான், முன்னல்லாம் எட்டு மணிக்கு எழுந்து சாப்டிட்டு அப்படியே படிக்க போயிடுவன் இப்ப எங்க போறான்னு பொலம்ப ஆரமிச்சிடுவாங்க, அதனாலேயே நான் படிகிரா  மாதிரி கொஞ்சம் நேரம் ஆக்ட்  பண்ணிக்கிட்டு, அப்படியே அவளை  நேனைச்சிடிருபன் இந்நேரம் அவ எழுந்திருபாலா, இல்ல தூங்குவாளா, கோலம்போட வருவாளான்னு ஏன் மனசு தவியா தவிக்கும்,  
  

மணி அஞ்சரை ஆச்சினா, நான் தலைல எண்ணெய் தடவி, முகத்தில பவுடர் பூசி, நெத்தியில செந்தூரம் விட்டுகிட்டு, அப்படியே டிப் டாபா, ராமராஜன் மாதிரியே வெட்கத்தோட வீதியில நடந்து வருவன், கொஞ்சம் பஸ்டாப் பக்கமா போயி, அவ கோலம் போட வருவாளான்னு வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு  இருப்பன், யாருக்கும் சந்தேகம் வரகுடாதுன்னு, அதிகாலையே ஒரு குருப் அறுவடைக்கு போக பஸ்சுக்காக காத்துகிட்டிருக்கும், அதுல நம்ம வயசுதிட்டம் ஒரு ஆளை புடிச்சி பேசிகிட்டே, அப்படியே அவ வீட்ட லுக் விடுவன், அவ வருவாளா வரமாடாலானு என் மனசு பைத்தியம் புடிக்கும், நான் அவல நேனைச்சிகிட்டிருக்கும்போதே, அவ குளிச்சி  தலைகூட  துவட்டாம, வெள்ளை துண்டால ஈர தலைமுடிய கொண்டையிட்டிருப்பால், கைல கோலமாவு கிண்ணத்தோட வந்து நின்னு ஒரு பார்வ பார்பாபரு ஐயோ அப்படியே செத்து போயிடலாமுன்னு தோணும், இதுக்காகத்தான் நாம பொறந்தொமடானு தோனும் இந்த ஒரு பார்வைக்காக நான் விடிய விடிய கூட காதுக்கிடிருக்க்கலாமுனு தோணும், நான் அவளையே ரசிச்சி பார்பன்அவ கிழ பார்ப்பா, அவ திரும்பி என்ன பார்ப்பா, நான் மேல பார்ப்பன், அது பயமா, இல்ல வெட்கமானு  எனக்கு தெரியல, அவல நேருக்கு நேர் பார்க்கும் தையிரியம் எனக்கு இல்ல, எங்க போயிடுவாலோனு என் மனசு பதறும் கோளம் போட்டிட்டு எழுந்து மறுபடியும் ஒரு லுக் விடுவா, சில நேரத்தில என் மனச கட்டுபடுத்தி அந்த லுக்க பார்க்க ட்ரை பண்ணுவன் அப்படி பர்த்துடனா அன்னைக்கு புல்லா ஆயிரம் தடவை அதை  நெனைச்சு பார்ப்பன்,அவளும் கோளம் போட்டிட்டு உள்ளார போயிடுவா, ஆனா நான் அங்கதான் இருப்பன்அப்பப்ப நான் அங்க இருக்கிரானான்னு பஸ் வருதானு பர்கிரமாதிரி வந்து பார்த்திட்டு போவா   , ஏன்னா அவ டென்த் கிளாஸ்ன்றதால கலையிலே டியூஷன் போய்ட்டு அப்படியே ஸ்கூல்லுக்கு போறதுக்காக உடனே  ரெடியாகி யுனிபார்ம்  மாட்டிகிட்டுஸ்கூல் பேக் எடுத்துகிட்டு பஸ் ஸ்டான்ட்டுக்கு வந்துடுவா, திடிர்னு பார்த்து சிரிப்பா, அப்போ அவளது முகம் காலையில பூத்த   பூ மாதிரி ப்ரெஷ்ஷா இருக்கும்  , எனக்கோ எங்கடா பஸ் வந்திட போகுதுன்னு வருத்தமா இருக்கும் அவளுக்கோ ஏதோ ஒரு பரிதவிபோட இருப்பா, பஸ் வந்ததும், எனக்கு பதட்டமாகிடும் அவளுக்கும்தான், அப்போ நேரா ஒரு பரவ பார்த்து, சயந்திரம் என்ன பார்க்க வருவியாடானு சொல்லாம சொல்லிட்டு போவா, நானும் அதவிட என்ன வேலை எனக்குன்னு சொல்லாம சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவன், அங்க போனா எங்க அம்மா, பெறிய சீம தொரை மாதிரி கலையிலே எங்க கெளம்பி போயிட்டுவர, எடுத்து வச்ச புசுதகம் அப்படியே கடக்கு, ஒன் மனசுல என்ன நெனைச்சிக்கிட்டுருக்கன்னு கொஞ்சம் சவுண்ட் விடுவாங்க, நான் உன் மறுமகளதான்மா நெனைச்சிக்கிட்டுருக்கன்னு மனசுக்குள்ள சத்தமா சொல்லிட்டு போய், போர்வைய போத்திக்கிட்டு அவள நெனைச்சி  படுத்திடுவன், அப்புறம் ஒன்பது மணிக்கு எழுந்து வீட்டுல  இருக்குற பழைய சாதத்த சாப்டிட்டு காலேஜிக்கு  போயிடுவன்

 எனது அடுத்த வலை தளத்தில் இக் கதையின் மீதி பாகத்தைஎழுதுகிறேன்அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது,

  உங்கள்  ஆருயிர்  நண்பன் 

 வேலு எழிலரசன்  



Thursday, 14 July 2011

ஏழையின் சிரிப்பிலே........!

என் ஆருயிர் நண்பர்களே இன்றைய எனது வலை தளத்தில்,  நான் படித்து ரசித்த சில நகைச்சுவை வாக்கியங்களை  இங்கே எழுதியுள்ளேன் நீங்களும் படித்து ரசியுங்கள், 
   






                            
                                              

Man :உங்கள பார்த்தா என் மூணாவது மனைவி மாதிரி இருக்கீங்க,
Women :ஓ அப்ப உங்களுக்கு மொத்தம் எத்தனை மனைவி,
Man: ரெண்டு,
  


                  
கேர்ல்ஸ் வாமிட்; "பேரன்ட்ஸ்" யார் அந்த ராஸ்கல்,                                                      
                

பாய்ஸ் வாமிட்:
"நாய குடிச்சிட்டு வந்திரிகியா "
யார் வாந்தி எடுத்தாலும் பாய்ஸ்க்குத்தான் கெட்ட பேரு...........




                                                               

      

Wife: எதுக்கு அடிகடி என்முகதுல தண்ணி தெளிக்கிரிங்க,

Husband: உங்க அப்பதான் உன்ன "பூமாதிரி பார்த்துக்க சொன்னருலஅதுக்குத்தான்




  
                                       
  
      

Friend; 1, மச்சான் ஏன்டா ரொம்ப மூட் அவுட்டா இருக்க,
Friend : 2, ஒன்னும்மிலடா நேத்து என் ஆளோட மொபைல வாங்கி என் பேர எப்படி ஸ்டோர் பன்னிருகாணு பார்த்தன் அதுலேந்து மூட் அவுட்டா அகிடண்டா,
Friend; 1, அப்படி என்ன பேருல ஸ்டோர் பண்ணிருந்தா
Friend : 2, டைம் பாஸ் 15 ஸ்டோர் பணியிருக்கா டா


    
எல்லா நாலும் ஒரே மாதிரியா இருக்குமா 


எனக்கு ஒரே மாதிரிதான் இருக்குது    




Dad: பக்கத்துக்கு வீட்டு பொண்ணு எவ்வளவு மார்க் வங்கியுருகா அவள பார்த்தாவது நல்லா படி,


Son: ஐயோ அவள பார்த்து பார்த்துதான்பா நான் படிகாமையே போயிட்டான்,



கடி ஜோக்ஸ் 




டிசம்பர் 31 கும் ஜனவரி கும் 
ஒரு நாள்தான் வித்தியாசம் 
ஆனால் ஜனவரி கும் டிசம்பர் 31 கும் 
ஒரு வருஷம் வித்தியாசம் 
இதுதான் உலகம்




 T Nagar போனாடீவாங்கலாம் .
ஆனால் 

          விருது நகர்போனா விருதுவாங்கமுடியுமா ?








என்னதான்பெரிய

வீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்கமுடியாது



நாம  அடிச்சா  அது  மொட்டை 


அதுவா  விழுந்தா  அது சொட்டை !  







தண்ணிக்குள்ள  கப்பல்  போனா ஜாலி ... கப்பல்குள்ள  தண்ணி போனா காலி... 









Today's punch:  தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா??இது எப்புடி இருக்கு…


கார்டூன்ஸ்  ஜோக்ஸ் 



பஞ்ச் டயலாக்


கிராபிக்ஸ் ஜோக்ஸ் 








எடுத்துகாட்டு 


நன்றி மறப்பது நன்றன்று  நன்றள்ளது
                                
அன்றே மறப்பது நன்று

                                                 
இந்த நாயின் நன்றி உணர்வை பாருங்கள்              

   
யன் உனக்கு இந்த வேலை 

என்றும் உங்கள் நினைவில் 
ஆருயிர் நண்பன்


இப்படிக்கு 
 வேலு எழிலரசன்